Sunday, February 28, 2010

இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்...!!!

எனக்கு வேற வழி தெரியலைங்க.... இந்த அரசாங்க செயல்பாடுகளை பார்த்த பிறகு, எனக்கு வேற என்ன சொல்றதுனு தெரியல.... அரசு உங்களுக்கு ரெண்டு வாய்ப்பு தர தயாரா இருக்கு.... ஒண்ணு அரசுக்கு எந்த தொந்தரவும் தராமா... நீங்களே பெருந்தன்மையா தற்கொலை பண்ணிக்கணும் இல்லைன்னா அரசு வந்து கொல்லும்... அப்ப வந்து குய்யோ முய்யோன்னு கூப்பாடு போடக்கூடாது....!!!

GDP 9% வளர்ச்சியை நோக்கி போயிட்டு இருக்குங்கிறான், கம்யூனிஸ்ட்காரங்க, தோழர்... விலைவாசி உயர்வைக் கண்டித்து இன்னைக்கு தொட்ர்வண்டி நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் இருக்கு... மறக்காம் குடும்பத்தோட வந்துருங்கன்னு... ஏதோ கல்யாணத்துக்கு கூப்பிடற மாதிரி SMS அனுப்புறாங்க...

பணவீக்கம் அதிகரிச்சுறுச்சுன்னு சொல்றாங்க.... அய்யா.... சாமி சத்தியமா... சுத்தமா ஏதும் புரியலைங்கய்யா... எனக்கு ஏதாவது வீக்கம்னா எங்க அப்புச்சிகிட்ட சொல்வேன்... அது எனக்கு பத்து போட்டுவுடம்... பணவீக்கத்துக்கு என்னப் பண்ணுறதுனு அதுக்கும் தெரியலையாம்...

சரி அந்த கருமத்தை விடுங்கய்யா... நாம விசயத்துக்கு வருவோம்...

பட்ஜெட்ல முகர்ஜி அய்யா... உரம் விலை உயராதுன்னு சொல்லி இருக்கீங்க.... ஆனா உர நிறுவனமே உரங்களின் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாங்கிறீங்க... சூது வாகு தெரியாதா புள்ளைய்யா உங்களை வளர்த்துட்டாங்களே முகர்ஜி அய்யா... உர கம்பெனிக்காரங்க அம்புட்டு பேரும் கயவாளி பயலுவோ... நிச்சயமா உரவிலையை ஏத்திப்புடுவாங்கய்யா...

ஏற்கனவே எங்க விவசாயிங்க அரிசியை உற்பத்தி பண்ணி வெளியில வித்துட்டு ஒரு ரூபாய் அரிசி தின்னுகிட்டு இருக்கான்...

அப்புறம் இன்னொரு விசயம்... நீங்க ஏதோ சட்டம் நிறைவேற்ற போறீங்களாமே... மரபணு மாற்றப்பட்ட விவசாய பொருட்களை யாரு எதிர்த்தாலும் அவுங்களை 6 மாசம் முதல் ஒரு வருசம் வரை உள்ள வச்சு அழகுப் பார்க்க போறீங்களாமே...

இங்க என்னத் தான்ய்யா நடக்குது....
ஏற்கெனவே விவசாயிங்க மரபணு மாற்றப்பட்ட பருத்தியை போட்டுட்டு தற்கொலை பண்ணிட்டாங்க... இப்ப கத்திரி, தக்காளி, வெண்டை... சரிங்க... பி,டின்னா என்னய்யா... ஒரு பொருளோட தன்மையை இன்னொன்னுல செலுத்தி... அந்த பொருளோட தன்மையை மாத்துறது... அதாவது தவளையோட மரபணுவை எடுத்து தக்காளி செலுத்தப் போறீங்களாமே...

எசமான்... எஙக பக்கத்து வீட்டு காரங்க கோழியே சாப்பிட மாட்டங்கங்கய்யா... இனி அவுங்களும் பூனை கண்ணனுங்க மாதிரி தவளையை சாப்பிடபோறாங்க... ஆனா தக்காளி வடிவத்துல....!!!

(பின்குறிப்பு : ஏதொ ஆர்வ கோளாறுல இதை எழுதிட்டேன்... தயவு செஞ்சு என்னைக் கைது பண்ணிறாதீங்க எசமான்...!!!)

சிறப்பு பொருளாதார மண்டலம், ரோடு போட போறோம், மயிரை பிடுங்கப் போறோம்... countryயோட development… அது இதுன்னு சொல்லி நம்மக் கிட்ட உள்ள எல்லாத்தையும் பிடுங்கிட்டான்... விதை உரிமை நம்மகிட்ட இல்லை....
புடுங்கிங்க... என் ரோட்ல நான் வண்டி ஓட்டுறத்துக்கு பணம் புடுங்கிறாங்க... இது எப்படி இருக்குன்னா...பொண்டாட்டியை காசுக் கொடுத்து புணருவது மாதிரி இருக்கு...

எதை பத்தியும் நாம் கவலைப்பட மாட்டோம்... அப்படியே கவலை வந்தாலும் நமக்காக நம்ம பாசதலைவன் டாஸ்மாக்கை திறந்து வச்சுருக்கான் அப்பையும் கவலை போகலைன்னா... நம்ம தலைவனோட குடும்பமே நம்ம கவலையை தீர்க்க சேவை மனப்பான்மையில சிரிப்பொலி,ஆதித்யா, மானாட மயிராட... மன்னிசுக்கங்க மயிலாடன்னு புரோகிராம்மு நடதிக்கிட்டி இருக்கு...

முன்னாடியெல்லாம்... நல்ல உப்பை தின்னு சூடு சொரணையோட இருந்தோம்... இப்ப tata saltஐ சாப்பிடுறோம்... அதான் நக்கி பிழைக்க்கூட தயாரா இருக்கோம்...

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்