என் அன்பு அன்னையே...
தீர்ப்பு நாள் என்றாய், கியாமத் நாள் என்றாய், judgment day என்றாய், நாம் கண்காணிக்கப்படுகிறோம்... நாம் செய்யும் தண்டனைகளுக்கு நிச்சயம் மறுமையில் தண்டனை உண்டு என்றாய்...
ஆம். அம்மா. நானும் உணர்ந்தேன்...
தேர்வறையில் கள்ளத்தனமாக நண்பணின் விடைத்தாளை காணும் போதும், வகுப்பிற்கு செல்வதாக சொல்லிவிட்டு நண்பர்களுடன் திரைப்படத்திற்கு சென்ற போதும், அடுப்பறை அஞ்சரப்பெட்டியிலிருந்து திருட்டுத்தனமாக சில்லரைகளை களவாடிய போதும்... நிச்சயமாக உணர்ந்தேன் நான் கண்காணிக்கப்படுவதை...
எப்போதும்... நான் செளகரியமாக உணர்ந்ததில்லை... தொடர்ந்து கண்காணிக்கப்படுகிற அவஸ்தையை நீ என்றுமே உணர்ந்ததில்லையா....?
குஜராத் பெஸ்ட் பேக்கரியில்... உயிரோட பலரை எரித்தப்போது.... முதன் முதலாக உன்னிடம் கேட்டேன்.... ஏன் அம்மா... இப்போது இறைவன்... கண்காணித்துக்கொண்டு இருக்கிறானா...? என்று.
ஆம் என்றாய். தீர்ப்பு நாளில் நிச்சயம் இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும் என்றாய்.
நான் சமாதானமடைந்தேன்.
பிறகொரு நாள்.... குண்டு வெடிப்பில் 30 பேர் மொத்தமாக இறந்தாக செய்தி தாளில் படித்தேன்...
நீ இதற்கும் அவன் காண்காணித்துக்கொண்டு இருக்கிறான் என்றாய்...!
ஈழத்தில் மொத்தாக 20,000 பேர்... ஒரு நாளில் கொல்லப்பட்ட போது... உன்னிடம் கொஞ்சம் அதட்டலாகவே கேட்டேன்...
ஏன் அம்மா... இப்போதும் இறைவன் கண்காணித்துக்கொண்டு மட்டும் தான் இருக்கிறானா? ஏன் காப்பதற்கு வர மாட்டேன் என்கிறான்?
”நீ... இப்படியெல்லாம் பேசாதே.... தீர்ப்பு நாளில் அவனுக்கு நீயும் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும்” என்றாய்.
சத்தியமாக என்னால் இப்போது சமாதானம் அடையமுடியவில்லை அம்மா...
நிச்சயமாக அம்மா... தீர்ப்பு நாளில்... உன் இறைவன் தீர்ப்பு அளிக்கும் இடத்தில் இருக்கமாட்டான்...!!!
நீ தான் அம்மா... என் சிறு வயதில் சொன்னாய்... குற்றம் புரிதலை விட அந்த குற்றத்தை கண்டும் காணாமல் இருத்தல் பாவம் என்று...!
என் சகோதரி கற்பழிக்கப்படுவதையும்... என் சகோதரன் கொல்லப்படுவதையும்... எம்மக்கள் கொத்துக் கொத்தாக அழிக்கப்படுவதையும்... எம் குழந்தைகள் ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் இறக்க நேர்ந்த்ததையும்... எப்படி அம்மா உன் இறைவனால் கண்காணித்துக்கொண்டு மட்டும் இருக்க முடிந்தது...!
அம்மா.. கள்ள மெளனம் சாதிக்காதே... தெளிவாக கூறு...தண்டிக்கப்பட வேண்டியது யாரென்று? ஏனெனில் நான் என் குழந்தையிடம் சொல்ல வேண்டும்... அவன் கண்காணிக்கப்படுகிறானா என்று?
அம்மா... உன் இறைவனை வேண்டுகிறேன்...
தயவு செய்து... தீர்ப்பு நாளில் என்னை மீண்டும் உயிர்பிக்க வேண்டாம்...
எனக்கு உன் இறைவனைப் பார்க்க அருவருப்பாக இருக்கும்...!
அவனுக்குள் மனிதம் இருந்தால் அவன் என்னை பார்க்க வெட்க்கப்பட்டாலும் படலாம்...
அம்மா... ஒரு வேளை தீர்ப்பு நாளில் நீ அவனை சந்தித்தால்...
வழி மாறாமல் நரகத்திற்கு செல்லும்படி அவனிடம் சொல்லிவிடு...!
அவனால் அது இயலவில்லையென்றால்...
இனி... இந்த கண்காணித்தலாவது வேண்டாம் என்று சொல்லிவிடு...!!!
Wednesday, March 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
நல்லா வருவீங்க தம்பி!
ReplyDeleteஉண்மையிலேயே அருமை!
சாட்டையை வேகமாக சுழட்டியிருக்கிறாய்.... உன் பதிவுகள் ஆழமாகட்டும்.
ReplyDeleteஅம்மா.. கள்ள மெளனம் சாதிக்காதே... தெளிவாக கூறு...தண்டிக்கப்பட வேண்டியது யாரென்று? ஏனெனில் நான் என் குழந்தையிடம் சொல்ல வேண்டும்... அவன் கண்காணிக்கப்படுகிறானா என்று?//
ReplyDeleteniyaayaman kelvi nanbarey
koodabey pathil solla mutiyaadhathum....
ReplyDelete